
முருகப்பெருமான் திருக்கோயில், தோரணமலை, கடையம்.
தென்காசி மாவட்டம்
அன்பார்ந்த வாசகர்களே!
சகல சிறப்புகளும் வாய்ந்த தோரணமலையில் வரும் சித்திரை முதல் நாள் (14-4-2021) முருகப்பெருமானின் திருமண வைபவம் நடைபெற உள்ளது. வள்ளி - தெய்வயானை சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது என்பது பெரும் பாக்கியம். திருமணத்துக்கு தடையாக உள்ள ராகு தோஷம், களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் யாவும் இந்தத் திருமண வைபவத்தை நடத்தி வைப்பதன் மூலம் நீங்கிவிடும் என்கிறார்கள். அதுமட்டுமா கந்தனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சுமங்கலிகளின் மாங்கல்ய பலமும் கூடிவிடும் என்பார்கள் பெரியோர். எனவே இந்த அபூர்வ மங்கல நிகழ்வில் கலந்து கொண்டு இல்லற வாழ்வின் எல்லா சுகங்களையும் பெற வேண்டுகிறோம்.
-
வாசகர்கள் கவனத்துக்கு:
தோரணமலை முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்துக்கு வாசகர்களே உபயதாரர்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக ரூ 500/- மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, குங்குமம், ரட்சை, முருகப் பெருமான் படம் ஆகியவை (30.4.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்க இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 13, 2021 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.