
திருப்புகழ் மகாமந்திர பூஜை மேகநாதேஸ்வரர் ஆலயம், மேலக்கோட்டையூர், வண்டலூர், சென்னை
எல்லா வளங்களையும் அள்ளித் தரப்போகும் சோபகிருது ஆண்டில் முருகனை வழிபடுவது சிறப்பானது என்கின்றன புனித நூல்கள். குறிப்பாக தமிழ் புத்தாண்டில் திருப்புகழ் மகாமந்திர பூஜை செய்ய உலகின் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
அன்பார்ந்த வாசகர்களே!
திருப்புகழ் மகா மந்திர பூஜையின் மகிமை: முருகன் அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் பாடி அருளியது திருப்புகழ். அற்புதமான இந்தப் பாடலில் முருகனை மட்டுமன்றி சைவ, வைணவ, சாக்த பேதங்கள் எல்லாம் பார்க்காம, சகல தெய்வங்களையும் உளமாரப் போற்றிப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.
அவ்வகையில் மகிமைகள் நிறைந்த திருப்புகழில் ஸ்ரீவிநாயகர், சிவபெருமான், அம்பாள், முருகன், மகாவிஷ்ணு, ஐயப்ப ஸ்வாமி, அனுமன் ஆகிய ஏழு தெய்வங்களைப் போற்றும் பாடல்களைப் பாடி, ஏழு தெய்வங்களுக்கும் உரிய ஏழு வித மலர்களைச் சமர்ப்பித்து, ஏழு வித நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது இந்தப் பூஜையின் தனிச் சிறப்பு. இப்படி ஏககாலத்தில் ஏழு தெய்வங்களை ஏகாந்தமா பூஜை செய்யும்போது கிடைக்கக்கூடிய பலன் பன்மடங்கு அதிகம். கடன் தொல்லையால் தவிப்பவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுவோர், பையனுக்கோ பெண்ணுக்கோ `இன்னும் கல்யாணமாகலையே' என்று வருந்துவோர், சொந்தமா வீடு வாசல் அமையலையேனு அல்லாடுவோர், பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கி, கோர்ட்டு கேஸ்னு அலைகிறோமே என்று புலம்பித் தவிப்பவர்கள்... இப்படியான பிரச்னைகளில் இருப்பவர்கள் ஒரே ஒருமுறை இந்தப் பூஜையைச் செய்தாலே போதும் அல்லது இந்தப் பூஜையில் சங்கல்பித்துப் பிரார்த்தனை செய்யலாம். அதன் பலனாக சகல பிரச்னைகளும் விரைவில் தீரும்; அன்பர்கள் நினைப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பார்கள் முருகன் அடியார்கள்.
தமிழ் புத்தாண்டான 14-4-2023 அன்று சக்திவிகடனும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் கோயில் நிர்வாகமும் இணைந்து திருப்புகழ் மகாமந்திர பூஜையை நடத்த இருக்கிறோம்.
காலை 10 மணி முதல் 12 மணி வரை சென்னை வண்டலூர் மேல்கோட்டையூரில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் அவர்கள் இந்த பூஜையை நடத்தவுள்ளார். அனைவரும் சங்கல்பம் செய்து பயன்பெற வேண்டுகிறோம்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதிப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின்,செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 13, 2023 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.