ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயம், கொரடாச்சேரி, திருவாரூர்
சாக்த உபாசனையில் தலைசிறந்த மகானாகத் திகழ்ந்த ஸ்ரீ பாஸ்கராச்சார்ய சுவாமிகளால் உருவாக்கப்பெற்ற ஸ்ரீசக்ர மஹாமேரு இங்கு அம்பாளாக அருளுகிறாள். இந்த மடாலயத்தை உருவாக்கிய சாக்த உபாசகர் ஸ்ரீ லஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் என்கிற சச்சிதானந்த சுவாமிகள். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து உணவின்றி கடுந்தவம் செய்து அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்ற மகான். இங்கு ஆவணி மாத பௌர்ணமியில் நடைபெறும் ஸ்ரீமகாலஷ்மி ஹோமத்தில் கலந்து கொண்டால் தீராதக் கடன்களைத் தீர்த்து செல்வவளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 ஆகஸ்ட் 19-ம் நாள் திங்கள்கிழமை ஆவணி மாத பௌர்ணமி நாளில் கொரடாச்சேரி ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஹோமம் மற்றும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமப் பாராயணம் நடைபெற உள்ளது. அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியும் ஸ்ரீஅம்பாள் இங்கே சிரசில் ஸ்ரீசக்ரம் தாங்கி தன்னை சரண் அடைந்தவர்களுக்கு சகலமும் வழங்கும் தாயாக இருக்கிறாள். வரும் பௌர்ணமி நாளில் இங்கு நடைபெறும் ஸ்ரீமகாலஷ்மி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத கடன்கள் தீரும்; வாட்டும் வியாதிகள் நீங்கும்; மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும் என்கிறார்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.