பகளா த்யான பீடம், வல்லக்கோட்டை
வல்லக்கோட்டையிலிருந்து கிழக்கே எறையூர் போகும் வழியில் அமைந்திருக்கிறது பகளா த்யான பீடம். இங்கே பிருந்தாவனத்தினுள் பகளா சக்தி அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 2006-ல் சோமநாதசிவாச்சார்யார் கனவில் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்பி பக்தர்கள் குறைகள் போக்கி மங்கள் வாழ்வுக்கு மந்திர உபதேசம் செய்யப் பணித்தாள் பகளாமுகி. அன்றிலிருந்து இன்றுவரை தன்னை வணங்கும் பக்தர்களின் எதிர்ப்புகளை நீக்கி வரமருள்கிறாள் பகளாமுகி.
அன்பார்ந்த வாசகர்களே!
2025 மார்ச் 13-ம் நாள் வியாழக்கிழமை மாசி பௌர்ணமி நன்னாளில் இங்கு பிரம்மாஸ்திர ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகம் குழப்பங்களை அகற்றி தெளிவான புத்தியையும், நாம் சந்திக்கும் எதிர்ப்புகளை, எதிரிகளை விலக்கி அமைதியான வாழ்வையும், வழக்குகளில் வெற்றியும், பில்லி சூன்யம் போன்ற ஆபிசாரங்களை போக்கும் வல்லமை படைத்தது. மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.